நடிகை வித்யா பாலன் மருத்துவமனையில் அனுமதி.. சிறுநீரகத்தில் கல் !

சிறுநீரகக் கல்லுக்கு சிகிச்சை பெறுவதற்காக நடிகை வித்யாபாலன் மும்பை மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். இந்திப்பட உலகின் முன்னணி நடிகை வித்யாபாலன்.
நடிகை வித்யா பாலன் மருத்துவமனையில் அனுமதி.. சிறுநீரகத்தில் கல் !
சில்க் ஸ்மிதா வின் வாழ்க்கை வரலாறை அடிப்படை யாக கொண்ட ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற படத்தின் மூலம் பெரும் புகழ்பெற்ற இவர், தொடர்ந்து குணச்சி த்திர நடிகையா கவும்,

மாடலிங் துறையி லும் முன்னணி யில் இருந்து வருகிறார். 37 வயதாகும் வித்யா பாலனுக்கு நாளை 2016 புத்தாண் டுடன் 38–வது வயது பிறக் கிறது.

பிறந்த நாள் விழாவை அவர் கணவ ருடன் நியூயார்க் நகரில் கொண்டாட திட்ட மிட்டிருந்தார். 

அதன்படி நேற்று முன்தினம் (டிசம்பர்-29) அபுதாபிக்கு விமானத் தில் சென்று அங்கி ருந்து நியூயார்க் விமான த்தை பிடிக்க இருவரும் திட்ட மிட்டிருந் தனர்.
இதற்காக வித்யா பாலன் கணவ ருடன் மும்பை விமான நிலையம் சென்று அபுதாபி விமான த்தில் ஏறி அமர்ந்தார். 

விமானம் புறப்பட தயாராக இருந்த போது திடீர் என்று வித்யா பாலனுக்கு கடுமை யான முதுகு வலி ஏற் பட்டது.

உடனே சித்தார்த் ராய் கபூர், வித்யா பாலனுடன் விமான த்தில் இருந்து இறங் கி நேராக காரில் மும்பை இந்துஜா மருத்துவ மனைக்கு சென்றனர். 

அங்கு டாக்டர்கள் வித்யா பாலனுக்கு ‘ஸ்கேன்’ எடுத்து பார்த்ததில் சிறு நீரகத்தில் கல் உருவாகி இருப்பது தெரிய வந்தது. 

இதை யடுத்து உடனடி யாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட அவருக்கு, சிறுநீரக கல்லை கரைப்பது தொடர்பான சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. 
இதன் காரணமாக வித்யா பாலனின் வெளிநாட்டுப் பயணமும் பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு கொண்டா ட்டமும் ரத்து செய்யப் பட்டது. 

கைதேர்ந்த மருத்து வர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவ தாகவும் விரை வில் அவர் குண மடைவார் என்றும் அவரது உதவியாளர் தெரிவித் துள்ளார்.
Tags: